பெரம்பலூர் | அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காரை வழிமறித்து தாக்குதல்! போலீசாரிடம் சிக்கிய வாலிபர்! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயலாளராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் காரில் சீர்காழியில் நடைபெற்ற டி.டி.வி தினகரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். 

அந்த காரை செந்தில் என்பவர் ஓட்டி சென்றார். இந்த கார் ஐயங்கொண்டம் வாரியங்கோவில் அருகே சென்றபோது அந்த பகுதியில் இருந்த 2 வாலிபர்கள் காரை திடீரென வழி மாறித்து நின்றதால் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்து காரை ஓரமாக நிறுத்தினார். 

பின்னர் அந்த வாலிபர்கள் காரை சூழ்ந்து நின்று கொண்டு தகராறில் ஈடுபட்டு கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினர். 

இதில் முன்பக்கம் இருக்கையில் அமர்ந்திருந்த கார்த்திகேயனுக்கு முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கார்த்திகேயனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் 2 வாலிபர்களும் குடிபோதையில் தகராறு செய்தது தெரிய வந்தது. 

பின்னர் தப்பிக்க முயன்ற இலையூர்மேலவழி கிராமத்தைச் சேர்ந்த சிவா (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk district secretary attack


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->