#BigBreaking : மார்ச் 24 அதிமுகவின் தலையெழுத்தை தீர்மானிக்க போகும் தீர்ப்பு வெளியாகும்! உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்த மூன்று வழக்குகளையும் இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்தது.

விசாரணையின் போது பன்னீர்செல்வம் தரப்பில், இந்த பொதுச்செயலாளர் தேர்தல் சட்ட விதிகளுக்கு புறம்பானது, இந்த தேர்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும், பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த தேர்தல் நடைபெற்றால், பிரதான வழக்கான அந்த வழக்கு செல்லாது ஆகிவிடும் என்று வாதம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொதுச்செயலாளர் தேர்தல் சட்ட விதிமுறைகளின் படி தான் நடைபெறுகிறது. கட்சியின் விதிமுறைகளை திருத்துவதற்கு பொதுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகுதான் இந்த பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது.

ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் எவ்வாறு நடத்தப்பட்டதோ, அதே முறையில் தான் இந்த தேர்தலும் நடைபெறுகிறது. இதில் எந்த முறைகேடும், தவறுகளும், அவசரமும் இல்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை அடுத்து நீதிபதிகள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார். ஆனால் இந்த பொதுச் செயலாளர் தேர்தலின் முடிவுகளை அறிவிக்க கூடாது என்ற ஒரு உத்தரவையும் பிறப்பித்தார்.

மேலும் ஓபிஎஸ் தரப்பு கூறிய பொது குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு வரும் ஏப்ரல் மாசம் நடைபெற இருந்ததை, வருகின்ற 22 ஆம் தேதியே விசாரணைக்கு வர இருப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் இந்த பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு 24ஆம் தேதி அன்று வழங்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.

எனவே, மார்ச் 24ஆம் தேதி அதிமுகவின் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Main Case Judgement March 24 OPS vs EPS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->