#Breaking: அதிமுக வேட்பாளர்கள் எஸ்.பி வேலுமணி, ஓ.எஸ் மணியன் ஆகியோர் அமோக வெற்றி.!
AIADMK Candidate Thondamuthur and Vedaranyam Harur Candidate Victory
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க. - தி.மு.க. - 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - விடுதலை சிறுத்தை கட்சிகள் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - கொ.ம.தே.க. - 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - முஸ்லிம் லீக் - 3 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.
மாலை 7 மணி நிலவரப்படி திமுக 159 இடங்களில் முன்னிலை வகித்த நிலையில், அதிமுக 75 இடங்களில் முன்னிலையில் வகித்து வருகிறது. இதனால் திமுக ஆட்சியை அமைக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி வேலுமணி வெற்றி அடைந்துள்ளார். அரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் வெற்றியடைந்துள்ளார். வேதாரண்யம் தொகுதி ஓ.எஸ் மணியன் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
AIADMK Candidate Thondamuthur and Vedaranyam Harur Candidate Victory