இரண்டு மாவட்டத்தில் அ.ம.மு.க நிர்வாகிகள்.! அ.தி.மு.க திரும்பினார்கள்.!!
again rejoined some ammk party's come to admk
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க மக்களிடையே சற்று செல்வாக்கை இழந்ததாலும் 22 தொகுதி சட்டமன்ற தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அ.ம.மு.க.வில் எந்த வேட்பாளர்களும் வெற்றி பெறவில்லை
அ.ம.மு.க கட்சியிலிருந்து போகின்றவர்களை தடுக்கமுடியாது இருப்பவர்கள் இருக்கலாம் என்ற தினகரன் பேசிய சர்ச்சை பேச்சால் அ.ம.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் சிந்திக்க வைத்துள்ளது. இதனால் சில அ.ம.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.க. வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருநெல்வேலி மற்றும் தருமபுரியில் சிலர் சேர்ந்துள்ளனர். இதன் காரணமாக மற்ற மாவட்டத்திலும் அ.ம.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அ.தி.மு.க தலைமை இழுக்க முயற்சிக்கிறது
சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால் அ.தி.மு.க.வுக்கு வந்தால் வாய்ப்புகளும் பதவிகளும் கிடைக்கும் என்று அ.ம.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் மாறுவதாக உள்ளனர். முதல்வரும் துணை முதல்வரும் கூறியது மீண்டும் அ.தி.மு.க வுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். தென் மாவட்டங்களில் அ.தி.மு.க வாக்கு வாங்கி பெறாததற்கு அ.ம.மு.க தான் காரணம் என்று தெரிந்தது. அ.தி.மு.க - அ.ம.மு.க இரண்டு கட்சிகளுக்கும் வாக்குகள் சென்றதால் சுலபமாக தி.மு.க வெற்றி பெற்றது.
அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசியது திருநெல்வேலி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் சிலர் வந்தது போல மற்ற மாவட்டங்களிலும் அ.ம.மு.க நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தாய் கழகத்திற்கு கொண்டு வர தலைமை உத்தரவிட்டுள்ளது
.
English Summary
again rejoined some ammk party's come to admk