வேட்டி, துண்டை வைத்து அதிமுக குறித்து பரபரப்பு பேட்டி அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.!
ADMK Minister Rajendra Balaji Press meet 21 Sep 2020
தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டமன்ற தேர்தலானது நடைபெற்றவுள்ளது. இந்த தேர்தலை அடுத்து ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி பேச்சுவார்தையாக இரகசியமான முறையில் ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில், இருகட்சியினரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல மாதங்களுக்கு முன்னதாக அடுத்தடுத்து வழங்கிய பேட்டிகள் கட்சியின் தலைமையை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பல சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வந்த நிலையில், கட்சியின் தலைமையில் இருந்து வந்த அழுத்தத்தால் பேட்டிகள் ஏதும் கொடுக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " கூட்டணி என்பது துண்டை போன்றது. கொள்கை என்பது வேட்டியினை போன்றது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொங்கும் கடல். எந்த காலத்திலும் அழிவே கிடையது. கொந்தளிப்புகள் வந்தாலும், அப்படியே இருக்கும் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
ADMK Minister Rajendra Balaji Press meet 21 Sep 2020