திமுக மாநாட்டில் திமுக தொண்டர் கையேந்தி நின்ற அவலம்! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று திமுக இளைஞரணியின் மாநில மாநாடு நடைபெற்றது. 

இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். 

இந்த மாநாட்டுத் திடலில் உள்ள கொடிமரத்தில் உள்ள கட்சிக் கொடியை திமுக எம்.பி. கனிமொழி ஏற்றிவைக்க, திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி 23 தீர்மானங்களை முன்மொழிய அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "உயர்கல்வியில் தமிழ்நாடு தான் நம்பர்.1 மாநிலம் என முதலமைச்சர் பேசி ஒரு மாதம் கூட ஆகவில்லை!

அதற்குள் திமுக மாநாட்டில் திமுக தொண்டர் தன் மகளின் கல்விச் செலவிற்காக கையேந்தி நிற்கும் அவலம்!

அவர் ஒருவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களும் திண்டாட்டத்தில் தான் உள்ளனர்!
முதலமைச்சர் குடும்பம் மட்டுமே கொண்டாட்டத்தில் உள்ளது!


 

பல கோடி செலவு செய்து ட்ரோன் வித்தை பார்க்கும் முதல்வர் கொஞ்சம் மக்களையும் பார்க்கலாம்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar comment DMK IT Wing meet


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->