அதிமுக தலைமை அலுவலக சீரமைப்பு பணி - எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!  - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற கலவரத்தால் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சேதம் அடைந்தது. சேதமான தலைமை அலுவலகத்தை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

அலுவலக சீரமைப்புப் பணிகளை அ.தி.மு.க.வின் நிர்வாகிகளும் ஆய்வு செய்தனர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்களால் சேதப்படுத்தப்பட்ட அலுவலகத்தின் கதவுகள், கதவுகளில் உள்ள பூட்டுகள், சில கதவுகளின் சாவிகளையும் பன்னீர்செல்வத்தின் ஆட்கள் எடுத்துச் சென்றதால் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. 

அலுவலகத்தில் உள்ள கணினிகளை ஓ.பன்னீர் செல்வம் எடுத்துச் சென்றதால், அதற்கு மாறாக புதிய கணினிகள் வாங்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் வெளிப்புறத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடிகள் அனைத்தும் மாற்றப்பட்டன. 

இன்னும் ஓரிரு நாட்களில் அலுவலகத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK head office renovation work eps visit


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->