ஆட்சி, அதிகாரத்திற்கு அடிபணியாத கட்சி ''அ.தி.மு.க'' - இபிஎஸ் பெருமிதம்.! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சி தே.மு.தி.க வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது அவர், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியை தி.மு.க விமர்சித்து வருகிறது. ஆனால் எங்கள் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் செயல் மறவர்கள், தொண்டர்கள் நிறைந்த கட்சியாக உள்ளது.

திமுகவும் காங்கிரசும், பணக்கார கட்சி. ஆடை கலையாமல் வாக்கு கேட்கிற தலைவர்கள் திமுகவிலும் காங்கிரஸிலும் மட்டும்தான் உள்ளனர். 

தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகினோம். சுயநலத்தோடு யோசித்ததால் அந்த கூட்டணியில் இருந்திருப்போம். 

அ.தி.மு.க கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு அடிபணியாத கட்சி தேசிய கட்சியோடு கூட்டணி வைத்து எந்த பிரயோஜனமும் கிடையாது. தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக அ.தி.மு.க தேசிய கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை. 

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், தி.மு.க தான். ஆனால் மீண்டும் அவர்களை நீட் தேர்வு ரத்து செய்வோம் என தெரிவித்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Edappadi Palaniswami speech


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->