வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்று சிறப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


வாக்காளர் அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்கும் திட்டமானது கடந்த மாதம் 1ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 26 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் படி தமிழக தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

 அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வீடு வீடாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலானவர்கள் வாக்காளர் எண்ணுடன் ஆதாரை இணைக்காமல் இருப்பதால் இன்று சென்னையில் சிறப்பு முகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடக்கிறது. பொது மக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநில தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adhar card and voter ID link special camp in Chennai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->