அதிரடி நடவடிக்கை! கனரக வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிப்பு...! - மாநகர காவல் ஆணையர் அருண்
Action Time restrictions imposed on heavy vehicles Metropolitan Police Commissioner Arun
சென்னை பெரம்பூரில், நேற்று லாரி ஏறி 'சௌமியா' என்ற 10 வயது பள்ளி சிறுமி உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் 'அருண்' உத்தரவிட்டுள்ளார்.

காவல் ஆணையர் அருண்:
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது," பள்ளி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக்கூடாது.பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் காவலர்கள் இருக்க வேண்டும்.
விபத்தை உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக்கூடாது.காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Action Time restrictions imposed on heavy vehicles Metropolitan Police Commissioner Arun