மகளின் கண்முன்னே தந்தைக்கு நிகழ்ந்த விபரீதம்.. திருவாரூர் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மகளின் கண் முன்னே விபத்தில் தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், பள்ளிவராமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரும் அவரது மகள் சௌமியாவும் ஒரு ஜவுளிக் கடையில் பணியாற்றியுள்ளனர்.  இன்று வழக்கம் போல இருவரும் தனித்தனியே சைக்கிளில் பணிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது சாலையில் எதிரே வந்த மணல் லாரி வீரமணியின் சைக்கிள் மீது  மோதியது.இதில், மகளின் கண்முன்னே வீரமணி பலியானார். அந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் வீரமணியின் சடலத்துடன் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident Near Thiruvarur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->