நண்பர்களுடன் உல்லாச பயணம்.! எதிர்பாராத நேரத்தில் தள்ளாடி.. ஏற்பட்ட சோகம்.!  - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை காரை காட்டன் பஜாரை சேர்ந்த பழனி மகன் சுரேஷ் (வயது30) என்பவர் பஸ் டிரைவர் வேலை பார்த்து வருகின்றார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஓட்டலில் சாப்பிடுவதற்காக சித்தப்பா மகன் காரை எடுத்து கொண்டு சென்றுள்ளனர். 

அப்பொழுது எம்.பி.டி. ரோட்டில் இருக்கும் பேக்கரியில் திண்பண்டங்களை வாங்கி கொண்டு மீண்டும் காரில் ராணிப்பேட்டைக்கு புறப்பட்ட போது அவுசிங் போர்டு அருகே வந்த கார் பேரிகார்டு மீது மோதியுள்ளது. 

Death, seithipunal
இதனால், கார் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் வேகமாக மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்து காரணமாக தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வண்டியை ஓட்டிய நண்பர் சாய் கிருஷ்ணா படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த சாய்கிருஷ்ணாவை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accident in ranipettai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->