பணிப்பெண் கொடுமை விவகாரம்: எம்எல்ஏவின் மகன், மருமகளுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு! - Seithipunal
Seithipunal


பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

வீட்டில் பணியாற்றிய பெண்ணை சித்திரவதை செய்ததாக பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை சென்னை போலீசார் ஆந்திர மாநிலத்தில் கைது செய்து பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிப்ரவரி 23ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

இதற்க்கு முன்பு, திமுக எம்எல்ஏவின் மகன், மருமகளின் ஜாமீன் மனுவை சென்னை உயர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

abuse case Court custody extension MLA son daughter in law


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->