கட்டிடத்தின் மேலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி பலி - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டிடத்தின் மேலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆனை அடி செங்கோடி சேர்ந்தவர் தொழிலாளி மோசஸ் (33). இவர் ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவரின் வீட்டில் கட்டிட வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மோசஸ் கட்டிடத்தின் மேல் பகுதியில் இன்று வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A worker killed fell from the top of a building in kanniyakumari


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->