கிரேன் மீது லாரி மோதி விபத்து.! 3 பேர் படுகாயம்
A truck collided with a crane
நாமக்கல் மாவட்டத்தில் கிரேன் வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, நேற்று மதியம் சேலம்-கோவை நெடுஞ்சாலையில் கிரேன் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கிரேன் வாகனம் மீது மோதியது. இதில் கிரேன் வாகனம் சாலையில் கவிழ்ந்து உள்ளது.
இந்த விபத்தில் கிரேன் வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து குமாரபாளையம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A truck collided with a crane