பாவம்! சாதிய கொடுமையில் சிக்கிய தூய்மை பணியாளர்...! அரசு தீர்வு தருமா? - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் மூலனுார் அருகே கருப்பன்வலசு ஊராட்சிக்குட்பட்ட முளையாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் என்பவர். இவர் அருகிலுள்ள சிறிய நகரமான மூலனுாரில் மூட்டை துாக்கும் தொழிலாளியாகவுள்ளார்.இவர் முன்னாள் தூய்மைப் பணியாளரான 'சரோஜா' என்பவரை சாதி பெயர் சொல்லி கடுமையாக பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவரது வீட்டின் முன் வெளி போட்டதாக தெரிகிறது.இது பற்றி சரோஜாவிடம் கேட்ட பொது,"குப்பை அள்ளுற வேலையை சாயங்காலம் பார்த்துக்கோ. காலையில என் தோட்டத்துல வந்து வேலை பாரு என்று சொன்னார். நான் முடியாது என்று சொல்லி விட்டேன். அதனால் என்னுடைய சாதிப்பெயரைச் சொல்லி மிக மோசமாகத் திட்டினார்.

இந்த ஊருக்குள்ளேயே உன்னை குடியிருக்கவே விடமாட்டேன் என்றார். அவரும் அவருடைய மகனும் சேர்ந்து தான் இந்த வேலியைப் போட்டார்கள்''என்றார்.தன்னுடைய வீட்டுக்குச் செல்லும் வழியில் தெருவை மறித்து அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியின் முன்பாக நின்று கண்ணீர் விட்டு அழுகிறார் சரோஜா.

இவர் பட்டியல் பிரிவைச் சேர்ந்த என்பதால் வீட்டின் முன்பாக வீதியை மறித்து கம்பி வேலி போடப்பட்டு இருப்பதில், மற்றொரு சாதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி துணைத்தலைவரின் தலையீடு இருப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு அதிகாரிகளிடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. பல மாதங்களாக அந்த வேலி அகற்றப்படாமல் இன்னும் அப்படியே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A sanitation worker caught in casteist cruelty Will government provide a solution


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->