பெட்ரோல் பங்கில் 10.Rs 'காயின்' கொடுத்தவருக்கு அடி உதை! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க் ஒன்றில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மாட்டோம் எனக் கூறி பங்க் ஊளியர்கள் தகராறு செய்து  வாகன ஓட்டுனரை அடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலந்தூர் பகுதியைச் சார்ந்த சரவணன் என்பவர்  சங்கராபுரம் சாலையில் அமைந்திருக்கும் தனியார் பெட்ரோல் பங்க் சென்று தனது இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல்  நிரப்பி இருக்கிறார். அப்போது அவரிடம் பத்து ரூபாய் குறைவாக இருந்ததால் பத்து ரூபாய் நாணயத்தை வங்கி மேலாளரிடம் கொடுத்திருக்கிறார். பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்  கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பத்து ரூபாயை வாங்க மறுத்ததோடு மட்டுமல்லாமல்   சரவணனையும் தாக்கி இருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பான காட்சிகள்  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

பத்து ரூபாய் நாணயம் தொடர்பான பிரச்சனை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நிலவி வருகிற ஒன்று. திருச்சி மதுரை போன்ற நகரங்களில் கூட பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் செயல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a man was attacked petol bunk employees over ten rupee coin issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->