கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற மனைவி..!! மன உளைச்சலில் கணவன் தற்கொலை..!!
A man commited to suicide Near Dharmapuri
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், கங்கியம் பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன். இவருக்கு திருமணமாகி கண்மணி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மகேந்திரன் அந்த பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் கண்மணி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மகேந்திரன் மட்டும் தனியே வசித்து வந்தார்.
மனைவி பிரிந்த சென்றதால் மகேந்திரன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவதன்று அவர் வீட்ட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட அக்கம்பக்கதிரன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A man commited to suicide Near Dharmapuri