பச்சை நிற லேசர் அடித்ததால் பரபரப்பு! தரையிறங்க வந்த எமிரேட்ஸ் விமானத்துக்கு நடந்தது என்ன?
A green laser caused a stir What happened to the Emirates plane that was landing
நேற்று சென்னை வந்த ''எமிரேட்ஸ் விமானம்'' மீது மர்மமான முறையில் லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த எமிரேட்ஸ் விமானம், துபாயிலிருந்து 326 பயணிகளுடன் வந்தது.

அப்போது சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, பரங்கிமலை பகுதியிலிருந்து விமானத்தின் மீது பச்சைநிற லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக செய்வதறியாது விமானி நிலை குலைந்தாலும், பயணிகளை காப்பாற்றும் முனைப்போடு சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
இச்சம்பவம் தொடர்பாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் புகாரின் பேரில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்று, 2 ஆண்டுகளுக்கு முன்பும் இச்சம்பவம் நடந்ததால் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
English Summary
A green laser caused a stir What happened to the Emirates plane that was landing