ஆசை வார்த்தை கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்..வடமாநில வாலிபர் மீது போக்சோ வழக்கு!
A girl was sexually assaulted after being lured by words of desireA POCSO case has been filed against a youth from the northern state
சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடிவருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க என்னதான் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது.குறிப்பாக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் சம்பவங்கள் அதிகரித்துவருகிறது.இந்தநிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 20 வயது வாலிபர் ரோம்கம் திருப்பூர், வீரபாண்டி பல வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கி டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில்,அந்த வாலிபர் திருப்பூர் பகுதியில் வசித்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியுடம் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி நெருங்கி பழகிவந்துள்ளனர்.
அப்போது தொடர்ந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் பரிசோதித்த போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமி பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கே.வி.ஆர் நகர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர் ரோம்கம்மை தேடி வருகின்றனர்.
English Summary
A girl was sexually assaulted after being lured by words of desireA POCSO case has been filed against a youth from the northern state