தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற சிறுமி திடீர் மாயம்..!!தேடி வரும் காவல்துறை..!!
A Girl Missing Near thanjavur
தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற சிறுமி மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ராஜேந்திரம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவருக்கு ருத்ரா தேவி(17) என்ற பேத்தி இருக்கிறார். கருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரது பேத்தி அவருடனே வசித்து வந்தார்.
இந்நிலையில், சம்பவதன்று அம்மன்பேட்டையில் இருந்து பேருந்தில் தனது தய் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். இதனை அடுத்து கருணாநிதி பேத்தியை பேருந்து நிலையத்தில் இருந்து அனுப்பி வைத்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து பேத்தி வீட்டிற்கு வந்துவிட்டாரா என விசாரித்த போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பேத்தி அங்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பதட்டமடைந்த கருணாநிதி அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார் ஆனால் அவரது பேத்தியை எங்கும் காணவில்லை. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
English Summary
A Girl Missing Near thanjavur