பெயரை திருத்த ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது!
A female revenue officer arrested for taking a bribe of Rs. 5,000 to change the name
பிறப்பு சான்றிதழில் பெயரை திருத்தம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் திங்களூர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவரது சொந்த ஊர் கரூர் மாவட்டம், ஆகும். இந்தநிலையில் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருரேவதியின் மகளான பவித்ராவின் பிறப்பு சான்றிதழில் பவித்ரா என்பதற்கு பதிலாக பௌத்ரா என்று இருந்துள்ளது. இதனால் அதை திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் பிறப்பு சான்றிதழில் தனது மகளின் பெயர் தவறாக இருப்பதால் பிற்காலத்தில் பிரச்சினை வரும் என கருதிய ரேவதி, கடவூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று பெயர் திருத்தம் செய்வதற்காக கடந்த 1½ ஆண்டுகளாக முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடவூர் தாசில்தார் சவுந்தரவல்லியை நேரடியாக சந்தித்து தனது மகளின் பிறப்பு சான்றிதழில் பெயரில் உள்ள எழுத்து பிழையினை திருத்தம் செய்து தரக்கோரி விண்ணப்பித்த போது பெற்றுக்கொண்ட தாசில்தார் சவுந்தரவல்லி, எழுத்துப்பிழையினை சரிசெய்வதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதி கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரேவதியிடம் ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்து சவுந்தரவல்லியிடம் நேற்று கொடுத்தார்.அப்போது அதனை வாங்கியபோது சவுந்தரவல்லியை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
A female revenue officer arrested for taking a bribe of Rs. 5,000 to change the name