நாட்டு வெடிகுண்டு வீசி பிறந்தநாள் கொண்டாட்டம்..வாலிபருக்கு மாவு கட்டு போட்ட போலீஸ்!
A country bomb was thrown during a birthday celebration the police arrested the young man
செங்கல்பட்டு அருகே நாட்டு வெடிகுண்டு வீசி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபருக்கு போலீசார் மாவு கட்டும் போட்டு உள்ளனர்.
தமிழகத்தில் சமீபகாலமாக பிறந்தநாள் கொண்டாத்தின்போது பிரபல ரௌடிகள் அரிவாளால் கேக் வெட்டுவது,பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக பைக் வீலிங் செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்றன,இப்படி நடைபெறும் சம்பவங்களை சமுகவலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டு மாட்டி கொள்ளவர்கள்,அப்படி மாட்டிக்கொள்ளும் அவர்களுக்கு போலீசார் மாவு கட்டும் போட்டு அனுப்பி வைப்பர்.
இந்தநிலையில் செங்கல்பட்டு அருகே நாட்டு வெடிகுண்டு வீசி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபருக்கு போலீசார் மாவு கட்டும் போட்டு உள்ளனர்.
செங்கல்பட்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் 21 வயதான தீபக் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடினார். கேக் வெட்டிய பின்னர் தனது நண்பர் தீபக்குக்கு பிறந்த நாள் பரிசாக நாட்டு வெடிகுண்டை வழங்கி அதனை வீச சொல்லி உள்ளார்.
கையில் நாட்டு வெடிகுண்டை வாங்கிய தீபக் அதனை வீசி வெடிக்க செய்து வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார். இந்த காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவிய நிலையில் அதனை பார்த்தவர்கள் போலீசாருக்கு வீடியோ காட்சிகளை பகிர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் தீபக்கை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த தனிப்படை தீபக்கை கண்டுபிடித்து பிடிக்க முயன்றனர்.அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்ற தீபக்கை போலீசார் துரத்தி செல்லும் போது கால் தவறி கீழே விழுந்ததில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீபக்குக்கு காலில் மாவு கட்டு போடப்பட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
English Summary
A country bomb was thrown during a birthday celebration the police arrested the young man