14 வயது பள்ளி மாணவியை சீரழித்த 62 வயது முதியவர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள போந்தூர் பகுதியில் மண்ணாங்கட்டி என்ற ராஜமாணிக்கம் (வயது 62) வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லாததால் மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மண்ணாங்கட்டி 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக சித்தாமூர் போலீசார் மண்ணாங்கட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மண்ணாங்கட்டி மீதான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மண்ணாங்கட்டிக்கு ரூபாய் 40 ஆயிரம் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதல் தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 62-year-old man raped 14-year-old schoolgirl


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->