14 வயது சிறுமியை கடத்திய 17 வயது கொடூரன்.. அதிர்ந்துபோன பெற்றோர்.. பரபரப்பு.!!
a 14 year child girl kidnapped police arrest culprit in Kanchipuram Uthiramerur
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பொன்னலூர் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதியை சார்ந்தவர் ரவி. இவருக்கு 14 வயது மகள் இருக்கிறார். இந்நிலையில், ரவி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரில், தனது 14 வயது மகளை உறவினர் கடத்தி சென்றுள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, காஞ்சிபுரம் ஆர்பாக்கம் இருளர் காலனி பகுதியை சார்ந்த முத்துக்குமார் (வயது 17) என்பவனை கைது செய்தனர்.
மேலும், கடத்தி செல்லப்பட்டு திருமணம் சிறுமியை திருமணம் செய்ததும் தெரியவந்த நிலையில், சிறுமியை மீட்ட காவல் துறையினர், குழந்தைகள் நலக்காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
14 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த முத்துக்குமாரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், முத்துக்குமாருக்கு வயது 17 என்பதால் அங்குள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
a 14 year child girl kidnapped police arrest culprit in Kanchipuram Uthiramerur