மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் போலீஸ் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சந்திரசேகர். இவரது மனைவி உஷா(38) வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த உஷா நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பின்பு வேலை முடிந்து இரவு வீட்டிற்கு உஷா மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது, கட்டைக்காடு பகுதியில் சாலையை கடந்து வீட்டிற்கு செல்வதற்காக மொபட்டை திருப்பியபோது வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென உஷா மொபட்மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட உஷா பலத்த காயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாலிபர் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 months pregnant police woman killed in motorcycle collision in kanniyakumari


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->