தொடர் விடுமுறை - தமிழகம் முழுவதும் 750 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வார விடுமுறை, முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வார இறுதி நாளான நாளை மற்றும் நாளை மறுநாள் 18-ந்தேதி, வருகிற 19-ந்தேதி சுபமுகூர்த்தம் உள்ளிட்ட நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கும், சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதன் படி தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் இன்று கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகளும், பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து ஆக மொத்தம் 750 பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

750 special bus run in tamilnadu for holiday


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->