#Breaking: 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!
7 tamils release case in supreme court judgement
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழகமே போராடி வந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர் .
சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுக, பாமக, திமுக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகளும் 7 போ் விடுதலையை தங்கள் தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசின் அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி செய்து தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இந்த வழக்கு உள்ளதால் விடுதலை குறித்து அவரே முடிவு எடுப்பார் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
7 tamils release case in supreme court judgement