சட்டவிரோதமாக கருகலைப்பு செய்த 7 பேர் கைது.. தர்மபுரி அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், செட்டிகரை பகுதியில் பெண்களின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதாக மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் உதவியுடன் அந்த பகுதியில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 அப்போது அந்த பகுதியில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜோதி ,சதீஷ்குமார் , சுதாகர் தர்மபுரியை சேர்ந்த கற்பகம் ஆகியவர்கள் எந்த மருத்துவ படிப்பும் படிக்காமல் கருவுற்ற பெண்களின் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து அவை பெண்களாக இருந்தால் கருக்கலைப்பு செய்து வந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்ததோடு அவர்களுக்கு உடந்தையாக இருந்த சரிதா, குமார்,  வெங்கடேசன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 Members Arrested in Dharmapuri


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->