பிரேசிலில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி, 22 பேர் காயம் - Seithipunal
Seithipunal


பிரேசிலில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு பிரேசிலின் சான்டா கேடரினா மாநிலத்தின் தலைநகர் ஃப்ளோரியானோபோலிஸி நகரில் இருந்து 54 பயணிகளுடன் ஃபோஸ் டோ இகுவாகு நகர் நோக்கி சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது பரானா நகர் அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பெர்னாண்டஸ் பின்ஹீரோவில் சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு பெண் மற்றும் அவரது மூன்று வயது மகள் உட்பட 7 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்த 22 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 killed 22 injured in tourist bus accident in Brazil


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->