50 பைசாவுக்கு பிரியாணி.. முண்டியடிக்கும் பிரியாணி பிரியர்கள்.!
50 paise briyani in Karur trichy road
50 பைசாவுக்கு பிரியாணி விற்கும் கடையினால் திருச்சி- கரூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கரூர்- திருச்சி சாலையில் காந்திகிராமம் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று இருக்கிறது. இந்த உணவகம் துவங்கப்பட்டு ஓராண்டு முடிந்த காரணத்தால் வாடிக்கையாளர்களுக்கு 50 பைசாவுக்கு பிரியாணி கொடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.
இந்த பிரியாணி வழங்கும் விழா இன்று 12 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அந்த ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக, 50 பைசாவுக்கு பிரியாணி வாங்க 11 மணியில் இருந்து அப்பகுதியில் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த கடையில், பிரியாணி வாங்க வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக திருச்சி - கரூர் சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது.
English Summary
50 paise briyani in Karur trichy road