சேலம் அதிமுக நகர செயலாளர் வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வருகிற 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதே சமயம் தேர்தல் விதிகளும் அமலில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், சேலம் அருகே தாரமங்கலம் அதிமுக நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியத்தின் வீடு மற்றும் நகைக் கடையில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அப்போது, பாலசுப்பிரமணியம் வீட்டில் ரூ.50 லட்சம் ரொக்கம், தங்கக் கட்டிகள் மற்றும் ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

50 lakhs money seized in salem admk city secratery


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->