6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 48 வயதானவருக்கு ஆயுள் தண்டனை.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 48 வயதானவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் மெச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(48). இவர் இதே பகுதியை சேர்ந்த ஆறு வயதுடைய சிறுமிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாஸ்கரனை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்குசோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் பாஸ்கரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஸ்கரனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

48 year oldman was sentenced to life imprisonment for sexually harassing a 6 year old girl in madurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->