சென்னையில் அடுத்தடுத்து 4 பள்ளி மாணவிகள் மாயம்.. பதற்றத்தில் பெற்றோர்கள்.!!
4 school girls missing
சென்னையில் ஒரே நாளில் 4 மாணவிகள் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் நான்கு மாணவிகள் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
ஆனால் மாலையில் வெகுநேரமாகியும் 4 மாணவிகளும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் பதற்றம் அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து காணாமற்போன மாணவர்களை சென்னையில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவிகள் கடத்தப்பட்டனரா? எனவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.