கார் மீது லாரி மோதி விபத்து.. நால்வர் பரிதாப பலி.. நால்வர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி சேர்ந்த கார்முகில் தனது உறவினர்களுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார் . கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு அவர்கள் திருச்சி சென்னை நெடுஞ்சாலை வழியாக கள்ளக்குறிச்சிக்கு திரும்பியுள்ளனர். அங்கு பெரம்பலூர் மாவட்டத்தின் அருகில் சென்று கொண்டிருந்தபோது உணவகத்திற்கு செல்வதற்காக வண்டியை திருப்பி உள்ளனர்.

 அப்போது நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.  இந்த விபத்தில் கார் முகில் மற்றும் அவரது மகன் உறவினர்கள் கண்ணன் தமிழரசி ஆகிய நால்வர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது இதனை எதிர்த்து ஒருவர் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பியுள்ளார்.

காயமடைந்தவர்களை மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 Person Accidental Death Near Trichy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->