விழுப்புரம்: ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்..! 2 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் அருகே 260 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் இருந்து சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விழுப்புரத்திற்கு கடத்தி வரப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து விழுப்புரம் போலீசார் முத்தம்பாளையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த காரை நிறுத்தினர். ஆனால் அந்தக் கார் நிற்காமல் அங்கிருந்து சென்றுள்ளது.

இதைத்தொடர்ந்து காரை மடக்கி பிடித்த போலீசார் காரில் இருந்த இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் காரில் சோதனை மேற்கொண்டனர். இதில், காரில் குட்கா, பான் மசாலா, கூல் லீப் போன்ற புகையிலை பொருட்கள் மூட்டைகளில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து காரில் கடத்தி வந்த ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான 260 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த மேல்மருவத்துறை சேர்ந்த பண்டாரம் (28) மற்றும் பாஸ்கரன்(32) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் இந்த கடத்தல் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 lakhs worth gutka seized in Villupuram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->