இன்னும் திறக்கப்படாத கதவு! கட்டுக் கட்டாய் சிக்கிய கோடி கணக்கான பணம்! ஐடி ரெய்டு மூன்றாவது நாள்! - Seithipunal
Seithipunal


ஈரோட்டைச் சேர்ந்த டாஸ்மார்க் வாகன ஒப்பந்ததாரரின் வீட்டில், நேற்று நடைபெற்ற வருமானவரி சோதனையில், 2 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர், அவரின் உறவினர்கள் நண்பர்கள், டாஸ்மார்க் ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள், குவாரி உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று மூன்றாவது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

இதில், கரூரின் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பிரேம்குமார் என்ற நபரின் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு பூட்டப்பட்டு இருப்பதால் சோதனை நடைபெறவில்லை.

கோவையில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகம், செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் வீடு அவரின் மனைவி காயத்ரியின் போதை மறுவாழ்வு மையம் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் எம் சாண்ட் நிறுவனம், அரவிந்த் என்பவரின் பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3rd day IT Raid in Karur Kovai Pollachi DMK Senthilbalaji


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->