கலால் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு! - Seithipunal
Seithipunal


கலால் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோோடியாவை சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். 

பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்வதற்காக கடந்த வாரம் மணி சிசோடியா இடைக்கால ஜாமின் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். 

 

ஆனால் மணீஷாயாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்ததை அடுத்து மே மூன்று ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம், சிசோடியாவின் ஜாமின் மனுக்கள் மீது பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்க துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

இந்நிலையில் மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manish Sisodia Court Custody Extension


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->