விஜயகாந்த் மறைவையொட்டி 3000 கடைகள் அடைப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்தின் உடல் இன்று அதிகாலை தீவு திடலுக்கு மாற்றப்பட்டது. அங்கு வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காவல்துறையினர் தடுப்புகள் அமைத்த நிலையில் வரிசையில் நின்றபடி விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

விஐபிகள், திரை பிரபலங்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான தனி பாதையும், தொண்டர்கள் ரசிகர்கள் வருவதற்கு தனி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜயகாந்த் மறைவையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதியில் இன்று  கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், புத்தூர், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 3000 கடைகள் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அடைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3000 shops closed on the occasion of Vijayakanth death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->