வார விடுமுறை எதிரொலி - தமிழகத்தில் கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு.!
300 special bus run in tamilnadu for holiday
தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை என்றால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது வார இறுதி விடுமுறை என்பதால், வெளியூரில் பணியாற்றக்கூடிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அவர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோருக்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
300 special bus run in tamilnadu for holiday