தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள்  மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் அருகே ஃபாஸ்ட்ஃபுட் உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட ஃபாஸ்ட்ஃபுட் உணவகத்தில் கால்நடை மருத்துவ மாணவர்கள் ஆன பிரவீன் (22 வயது), பரிமலேஸ்வரன் (21 வயது), மணிகண்டன் (21 வயது) ஆகிய 3 பேரும் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர்.

அதன் பின்னர் இவர்களுக்கு உணவு ஒத்துக் கொள்ளாததால் வாந்தி மயக்கம் ஏற்படும் நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே 2ம் தேதி கேரள மாநிலத்தில் துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்தார். மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 students admitted to hospital after eating shawarma in Thanjavur


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->