இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய கார்.. புதுப்பெண் உள்ளிட்ட மூவர் பலி..! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனம் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், வேலூர் செல்லும் ரோட்டில் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பிரிவு அருகில் திண்டுக்கல்லை சேர்ந்த சுரேஷ் (வயது 35), சுப்பிரமணி (50) தங்களது இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடு சென்று கொண்டிருந்தனர்.  அதே வேளையில் திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சேர்ந்த சிவசக்தி நகர் ராமகிருஷ்ணன் என்பவர் வேலூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான நிலையில் காரில் பயணம் செய்த ஜூவிதா என்பவர் உயிருக்கு போராடிய நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜூவிதாவிற்கு திருமணமாகி இரண்டே நாளில் கணவன் கண்முன்னே புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 Person death in Accident


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->