#திருப்பத்தூர் : அரசு பேருந்து - ஆட்டோ மோதி பயங்கர விபத்து..! மேளம் அடிக்கும் தொழிலாளர்கள் 3 பேர் பலி..! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து - ஆட்டோ மோதிய விபத்தில் மேளம் அடிக்கும் தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மேளம் அடிக்கும் தொழிலாளர்கள் 10 பேர் நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் தபால்மேடு பகுதிக்கு மேளம் அடிக்க ஆட்டோவில் சென்றனர். அப்பொழுது கந்திலி சந்தைமேடு அருகே சென்ற போது, திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பேருந்து ஆட்டோவில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் சந்திரபுரத்தை சேர்ந்த கார்த்திக் (18) மற்றும் நாயக்கன்பட்டியை சேர்ந்த சாரதி (20) ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரவிந்த் (20) இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 killed in government bus auto collision in Tirupattur


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->