#திண்டுக்கல் : 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்.!தொழிலாளிக்கு அதிரடி தண்டனை விதித்த நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பகுதியை அடுத்த சுவாமிமலை பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி விஜய்(43). இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட தாண்டிக்குடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விஜயை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி விஜய்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜராகி வாதாடினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 years prison for worker who sexually harassing a 13 year old girl in Dindigul


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->