#Chennai || கடல் அலையில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் கலைகட்டி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது அதேபோன்று சென்னையில் உள்ள கடற்கரை பகுதியில் காணும் பொங்கலுக்கான முன்னேற்பாடுகள் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் காணும் பொங்கல் பாதுகாப்பு பணிக்காக சுமார் 15,000 போலீசார் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ஈச்சம்பாக்கம் கடற்கரையில் அலையில் சிக்கிய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேளச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஈச்சம்பாக்கம் கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தபோது மகேஷ் வருண் குமார் என்ற இளைஞர்கள் தலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ரவி என்ற இளைஞர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 youngsters died in Chennai beach


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->