#திருவள்ளூர் || காவலர்களை தாக்க முயன்ற 2 ரவுடிகள் கைது.!!
2 rowdies arrested tried to attack police in thiruvallur
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் காவல்துறையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் வந்த வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது 2 ரவுடிகள் காவலரை தாக்கியுள்ளனர். இதனனை அடுத்து சோதனையில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் மகேஷ், ஜெயசாரதி ஆகிய இரு ரவுடிகளை கைது செய்து அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சென்ற உதவிஆய்வாளர் மற்றும் காவலர் மீது 2 ரவுடிகள் தாக்குதல் நடத்தியபோது பாதுகாப்பிற்காகக சுட்டதில் 2 ரவுடிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
2 rowdies arrested tried to attack police in thiruvallur