ராணிப்பேட்டை || 2 மோட்டார் சைக்கிள் மோதல் - 2 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராமநாதபுரம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (55). திமுக பிரமுகரான இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வேலூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ரத்தனகிரி அடுத்த சோழபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, பின்னால் வந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்(32) என்பவர் ஊட்டி வந்த மோட்டார் சைக்கிள் பாண்டுரங்கன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed in motorcycles collision in ranipet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->