கல்பாக்கம் அருகே கார் கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 4 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கல்பாக்கம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (30), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் (31) ஆகிய இருவரும், நண்பர்கள் 4 பேருடன் காரில் புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது கல்பாக்கம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் உள்ள மேம்பால தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.

இந்த பயங்கர விபத்தில் புருஷோத்தமன் மற்றும் முருகானந்தம் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காரில் பயணம் செய்த நண்பர்களான கிஷோர், நிர்மல், கார்த்திக், நரேஷ் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed 4 injured in car accident in kalpakkam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->