திருச்சி தீயணைப்பு நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி தீயணைப்பு நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருச்சி நீதிமன்றம் அருகே அமைந்துள்ள தீயணைப்பு நிலையத்தில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் அனைவரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீயணைப்பு வீரரான பிரசாந்த் என்பவர் பெரிய சிலிண்டர் ஒன்றிலிருந்து சிறிய சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வாய்வு அழுத்தம் அதிகமாகி சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது.

இந்த விபத்தில் பிரசாந்த் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரி சரவணன் ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 injured in explosion of oxygen cylinder at Trichy fire station


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->