பத்திரிகையாளர் மீது தாக்குதல்: அதிமுக பிரமுகர்கள் இரண்டு பேர் கைது!!
2 ADMK members arrested for journalist attacked
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. அரசியலில் அமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் நடக்கும் மோதல் போக்கு குறித்த செய்தியினை வெளியிட்ட “குமுதம் ரிப்போர்ட்டர்” பத்திரிகைச் செய்தியாளர் கார்த்தி, சிவகாசியில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆவின் மேலாளர் (நிர்வாகம்) பதவிக்கு, அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியின் மனைவியும், மற்றொரு மேலாளர் பதவிக்கு விருதுநகர் அ.தி.மு.க. பிரமுகர் மகனும் நியமிக்கப்பட்டது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளையும், அரசியல் மோதல்களையும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம், குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் வெளியிட்டுள்ள நிலையில், அதன் செய்தியாளர் மீது இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்த தப்பி ஓடிய ரிப்போர்ட்டர் கார்த்தி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்ய வலியுறுத்தி, விருதுநகர் மற்றும் சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அதிமுகவை சேர்ந்த கு.முருகன் மற்றும் செல்லபாண்டி ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
English Summary
2 ADMK members arrested for journalist attacked